Thursday 26 July 2012

வளர்ச்சி !

என் காதலும் .....
உன் விரல் நகமும் .....

 ரெண்டையும் 
நீ வளர விடுவதே இல்லை !!!!

Wednesday 2 May 2012

மழை!.....




நீ அதிகம் வந்தால்..
ஐயோ!! இப்படி பெய்கிறதே ......
என்கிறார்கள்........

நீ வரவில்லை என்றால்
பாலாப்போன மழை என்று
புலம்புகிறார்கள் .......






அது ஏனோ
எனக்கு மட்டும் உன்மேல்
அப்படி ஒரு நெருக்கம்....

பள்ளிப்பருவத்தில்
வீடு திரும்புகையில்
எத்தனையோ நாட்கள்
என்னை, உன்னில் தொலைத்து
புத்தகபைக்கு சட்டையை
குடையாக்கி வீடுசேர்ந்திருக்கிறேன்.......

சாலை குழிகளில்
தேங்கிய உன்னில்
என்னை துலைத்திருகிறேன்....

பெருக்கெடுத்து ஓடிய
ஆற்று வெள்ளத்தில்
கயிறு கட்டி உன்னில் இறங்கி
உன் பலத்தை சோதித்திருக்கிறேன்.......

பகலில் உன் நிறத்தை
அறிந்த நான்
இரவில் உன் நிரமரிய
பல நாள் தவம் இருந்திருக்கிறேன் .........

பேருந்து பயணத்தில்
ஜன்னல் வழியே உன்னில் நுழைய
விரும்பியபோதெல்லாம்
பக்கத்தில் இருப்பவரிடம்
செல்ல திட்டு வாங்கிருக்கிறேன் .......

ஜலத்தில் தான் பிறக்கிறோம்
ஆனாலும்........
உன்னைத் தொட்டால் ஜுரம் வருமாம்

நீ வரும்போதெல்லாம்
இந்த பூமியை குளிரூட்டித்தான்
செல்கிறாய்..
அது எப்படி இந்த மனிதர்களுக்கு
மட்டும் உன்னால் வெப்பம் வருகிறது?

அது என்னவோ நேற்று மாலை கூட                                  
உன்னில் தான் திழைத்திருந்தேன்.........
குளிர்ச்சியைத் தவிர
வேறு உணர்ந்ததில்லை உன்னில்.........

Thursday 26 April 2012

ஏழாம் பொருத்தம் !!!



அருவியில்
முத்துக்களாக நீர்த்துழிகள்.....

அப்படித்தான்
எனது நாவினிலும்
ஆங்கில வார்த்தைகள்
அடுத்தவர்முன்
பேசுகையில் ...............

நாக்கு
நாட்டியமாடி ....
ஆங்கிலம் அதலபாதாளத்தில்
சென்றுவிடுகிறது

அவள் முகம்பார்த்துப்
பேசுகையில் மட்டும் ......... 

Monday 23 April 2012

கவி சுகம் !!



அவர்கள்
காதலியை நேசித்ததைவிட
கவிதையை நேசித்ததே
அதிகம் ......

அதனால்தானோ ...
ஒவ்வொரு
கவிஞனுக்குள்ளும் - ஒரு
காதல் தோல்வி !!!!........??????.

Sunday 22 April 2012

பிறைநிலா !




மாதத்தில் ஒரு நாளாவது -நிலா 
தன் வயிறை நிரப்பிக்கொள்கிறது ...

 தெருவாசிகளின் வயிறோ..
நாளெல்லாம் பிறைநிலாதான்!!!!!!

Tuesday 17 April 2012

விருட்சம் என்று விட்டுவிட்டாய் !

உன்னைப் பெற்றெடுத்து
என் வலப்பக்கம் நீ கிடக்கையில்
நான் நினைத்ததில்லை .........

மார்விலக்கி முலைப்பிடித்து
பால் புகட்டும்போது
நான் நினைத்ததில்லை .........

நீ தவழும்போது
என் உயிர் வைத்து
உன்னைப் பாதுகாக்கையில்
நான் நினைத்ததில்லை .......

என் பாதத்தின் மேல்
உன் பூப் பாதம் வைத்து
நீ நடைப்பழகுகையில்
நான் நினைத்ததில்லை ....
உன் தலைப் பிடித்து
வகிடெடுத்து சிகைவாரிவிடுகையில்
நான் நினைத்ததில்லை ......

நீ முழுகால் சட்டைப் போட்டு
என் முந்தானைப் பிடித்து
வருகையில் கூட
நான் நினைத்ததில்லை........

காதலி என்ற காரிகையை
கண்டவுடன் .......

என்னை விருட்சம் என்று
விட்டுப்போவாய் என
ஒரு நாளும் நினைத்ததில்லைஅடா ......

Saturday 14 April 2012

ஈரமில்லை !



 
முட்டி.... முட்டி ..! மோதிக்கொண்டிருக்கும் ,,,
ஆலமரத்தின் விழுதுகளுக்கு .
      
எப்படி ? புரியவைப்பது

இதையமெனும் பூமியில்
ஈரமில்லைஎன்பதை !!!!......