Tuesday, 17 April 2012

விருட்சம் என்று விட்டுவிட்டாய் !

உன்னைப் பெற்றெடுத்து
என் வலப்பக்கம் நீ கிடக்கையில்
நான் நினைத்ததில்லை .........

மார்விலக்கி முலைப்பிடித்து
பால் புகட்டும்போது
நான் நினைத்ததில்லை .........

நீ தவழும்போது
என் உயிர் வைத்து
உன்னைப் பாதுகாக்கையில்
நான் நினைத்ததில்லை .......

என் பாதத்தின் மேல்
உன் பூப் பாதம் வைத்து
நீ நடைப்பழகுகையில்
நான் நினைத்ததில்லை ....
உன் தலைப் பிடித்து
வகிடெடுத்து சிகைவாரிவிடுகையில்
நான் நினைத்ததில்லை ......

நீ முழுகால் சட்டைப் போட்டு
என் முந்தானைப் பிடித்து
வருகையில் கூட
நான் நினைத்ததில்லை........

காதலி என்ற காரிகையை
கண்டவுடன் .......

என்னை விருட்சம் என்று
விட்டுப்போவாய் என
ஒரு நாளும் நினைத்ததில்லைஅடா ......