Thursday, 26 April 2012

ஏழாம் பொருத்தம் !!!



அருவியில்
முத்துக்களாக நீர்த்துழிகள்.....

அப்படித்தான்
எனது நாவினிலும்
ஆங்கில வார்த்தைகள்
அடுத்தவர்முன்
பேசுகையில் ...............

நாக்கு
நாட்டியமாடி ....
ஆங்கிலம் அதலபாதாளத்தில்
சென்றுவிடுகிறது

அவள் முகம்பார்த்துப்
பேசுகையில் மட்டும் ......... 

Monday, 23 April 2012

கவி சுகம் !!



அவர்கள்
காதலியை நேசித்ததைவிட
கவிதையை நேசித்ததே
அதிகம் ......

அதனால்தானோ ...
ஒவ்வொரு
கவிஞனுக்குள்ளும் - ஒரு
காதல் தோல்வி !!!!........??????.

Sunday, 22 April 2012

பிறைநிலா !




மாதத்தில் ஒரு நாளாவது -நிலா 
தன் வயிறை நிரப்பிக்கொள்கிறது ...

 தெருவாசிகளின் வயிறோ..
நாளெல்லாம் பிறைநிலாதான்!!!!!!